Sunday 5th of May 2024 12:18:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவால் வவுனியாவில் களையிழந்தது பொங்கல்!

கொரோனாவால் வவுனியாவில் களையிழந்தது பொங்கல்!


வவுனியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை பொங்கல் பண்டிகை களை இழந்துள்ளது.

வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளநிலையில் நகரப்பகுதிகள் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நகரில் அமைந்துள்ள முக்கிய ஆலயங்களில் இம்முறை பொங்கல் நிகழ்வோ பூசை அனுட்டானங்களோ பெரியளவில் இடம்பெற்றிருக்கவில்லை. வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் சுகாதாரநடைமுறைகளை கடைப்பிடித்து சிறியளவில் பொங்கல் நிகழ்வும் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை நகரின் முடக்கம் காரணமாக மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை இம்முறை பெரியளவில் களைகட்டியிருக்கவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE